தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பிசான சாகுபடி விவசாயம் பயிர் செய்த நிலையில் அறுவடை பணி தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை வருடா வருடம் கடையத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் நேரடி கொள் முதல் நிலையத்தில் நெல்களை விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் இந்தாண்டு வழக்கமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காமல், கடையம் அருகே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள கானாவூரில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதையடுத்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரியிடமும், ஆட்சியரிடமும் சென்று முறையிட்டனர், இதையடுத்து மீண்டும் கடையத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இதையடுத்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல்களை கொண்டு வந்தனர்.
அப்போது திடீரென நிலையத்திற்கு வந்த திமுகவினர், அங்கிருந்த விவசாயிகளிடம் தகாத வார்த்தையில் பேசி மோதலில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திமுக நிர்வாகி ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள், கடையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது : விவசாயிகள் நல்ல முறையில் நெற்களை போட்டுள்ளார்கள், தொழிலும் ஒழுங்காக நடைபெற்று வருகறிது. ஆனால் அடியாட்களோட வந்து அதிகாரிகளை மிரட்டி இங்கு நெல் கொண்டு வர கூடாது என சொல்ல அவன் யாரு?
அவன் ஒரு அரசியல்வாதி நாங்கு விவசாயி. நாங்க போராட்டம் பண்ணித்தான் இங்கு நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வந்துருக்கோம், இங்கேயே அறுவடை செய்து இங்கேயே விற்கத்தான் நாங்க இங்க குடோன கொண்டு வந்தோம்,ரொம்ப தூரம் கொண்டு போக எங்ககிட்ட எதுவும் இல்ல, நான் அறுப்பு அறுக்க வண்டி தேடி போயிருந்த நேரம் இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டாங்க.
ஒரு வண்டியில வந்து இந்த மாதிரி அராஜகம் பண்றாங்க, போலீஸ்காரர்களும் எங்கள பேச விடல, நீங்க உள்ள போனு சொல்றாங்க என மனமுருகி தங்களது வேதனையை கூறினர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.