ஒட்டப்பிடாரம் உலகண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
அப்போது ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு சுதேசன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தின் போது மாட்டு வண்டியின் பின்னால் காவல் ஆய்வாளரின் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் பேச்சிமுத்து (வயது 35) திருநெல்வேலி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வரும் இவர் இருசக்கர வாகனத்தில் தெற்குபரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது காவல் ஆய்வாளரின் வாகனத்திற்கு முன்னால் சென்று மாட்டின் முதுகில் கம்பியால் குத்தியதாக கூறப்படுகிறது .
அப்போது காவல் ஆய்வாளர் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரேஸ் நடத்திய விழா கமிட்டியினரும் சத்தம் போட்டு உள்ளனர்.
தொடர்ந்து கேட்காமல் கம்பியால் மாட்டை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காவல் ஆய்வாளர் மீண்டும் சத்தம் போட்டு உள்ளார்
அப்போது வக்கீல் பேச்சிமுத்து, காவல் ஆய்வாளர் சுதேசனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேச்சி முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.