சாணார்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய வி.ஏ.ஒவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ளது மார்க்கம்பட்டி கிராமம். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் வாய்க்கால் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக வி.ஏ.ஒ க்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் உதவியோடு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதையடுத்து வி.ஏ.ஒ அலுவலகத்திற்கு வந்த மார்க்கம்பட்டியை சேர்ந்த திருப்பதி, செல்வம், மூர்த்தி ஆகிய மூன்றுபேரும் எப்படி ஆக்கிரமிப்பை எடுத்தீர்கள், இதனால் உங்கள் தலையை வெட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வி.ஏ.ஒ கோபாலகிருஷ்ணன் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.