தமிழகம்

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்.. ஜான் ஜெபராஜ் ஆதரவாளரை ரவுண்டு கட்டிய போலீசார்!

கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பட்டு வருகிறார்.மதபோதகர் ஜான் ஜெபராஜ் சமீபத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்துள்ளார்.

இதையும் படியுங்க: மூதாட்டி கொலை வழக்கில் திருப்பம்.. மலையில் பதுங்கியிருந்தவனை சுட்டுப் பிடித்த போலீசார்!

கடந்த மாதம் ஜான் ஜெபராஜ் குறித்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சின் வழக்கறிஞர் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இதனால் கோபம் அடைந்த ஜான் ஜெபராஜ் ஆதரவாளர் ஜோஸ்வா எடிசன் என்பவர் சமூக வலைதளங்களில் மற்றும் யூ டியூப் சேனல்களில் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் மற்றும் அவரது வழக்கறிஞர் நண்பர் குறித்து அவதூறு பரப்பினார்.

இதை தொடர்ந்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் நண்பர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஜோஸ்வா எடிசன் மீது புகார் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி நள்ளிரவு சுமார் 1.15 மணிக்கு ஜோஸ்வா எடிசன் செல்போன் மூலம் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சின் நண்பர் ரியல் எஸ்டேட் அதிபர் பிரபு டேனியலுக்கு அழைத்துள்ளார்.

அப்போது ஜோஷ்வா எடிசன் ஆபாச வார்த்தைகள் பேசி வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த விபரத்தை பிரபு டேனியல் தனது நண்பர் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜோஷ்வா எடிசனை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

40 நடிகைகளுடன் பார்ட்டி- உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? கொந்தளித்த பிரபலம்

டாஸ்மாக் முறைகேடு  டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக…

5 hours ago

எதுக்கு இந்த அவசரம்? நிர்மலா சீதாராமனுக்கு பரபரப்பு கடிதம் எழுதிய தமிழக எம்பி..!!

ஒன்றிய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து சு. வெங்கடேசன் எம் பி மனு அளித்துள்ளார். இது குறித்து…

5 hours ago

மறுபடியும் ஒரு அறிக்கையா? போதும் வேண்டாம்- ரவி மோகனால் நொந்துப்போன ரசிகர்கள்!

ரவி மோகன்-ஆர்த்தி விவகாரம் ரவி மோகனும் ஆர்த்தியும் தங்களது பிரிவை அறிவித்ததில் இருந்து சமூக ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் அவர்கள்…

6 hours ago

எனது 3 காதலிகளுக்கு நன்றி- நெட்டிசன்களை அதிர்ச்சியடையச் செய்த எஸ்.ஜே.சூர்யா?

டைரக்டர் டூ வில்லன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. “வாலி”, “குஷி”, “நியூ”, “அன்பே…

7 hours ago

ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும்… முதலமைச்சர் யோசனை.!!

ஆந்திர மாநிலம் கடப்பவில் மூன்று நாட்கள் நடைபெறும் தெலுங்கு தேச கட்சியின் மகாநாடு நேற்று தொடங்கியது. இதில் பேசிய அக்கட்சியின்…

7 hours ago

திருமண பத்திரிகையுடன் வந்த விஷால்.. சுத்திப் போட்ட பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ!

நடிகர் விஷாலுக்க 47 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவரை பார்க்கும் இடங்களில் எல்லாம், எப்போது…

8 hours ago

This website uses cookies.