தமிழகம்

உயரும் பலி எண்ணிக்கை.. குடிநீரில் கழிவுநீரா? பல்லாவரத்தில் நிலவும் பதற்றம்!

சென்னை, பல்லாவரத்தில் உடல் உபாதைகள் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கு கழிவு நீரில் குடிநீர் கலந்ததே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

சென்னை: சென்னை அடுத்த, பல்லாவரம் அருகே உள்ள மலைமேடு மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் மக்கள் நேற்று (டிச.4) வழக்கம் போல் வந்த தண்ணீரை அருந்தியதாகத் தெரிகிறது. அதன் பின்னர், அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் உள்ளிட்ட உடல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் என மொத்தம் 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் 8 ஆண்கள், 15 பெண்கள் உட்பட மொத்தம் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேருக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாகவும் மருத்துவமனை மற்றும் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இதில் திருவேதி என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததால், அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் கூடி குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘நகையைத் திருடினியா திருட்டு****..’ சிறுமியை தனியாக மிரட்டிய எஸ்ஐ? பெற்றோர் பரபரப்பு புகார்!

இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே, இந்தச் சம்பவத்தை அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்தச் சம்பவத்திற்கு குடிநீர் காரணம் இல்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட மீனால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீரைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

26 minutes ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 hour ago

இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…

1 hour ago

குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…

2 hours ago

ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…

விஜய்யின் கடைசி திரைப்படம்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…

3 hours ago

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

4 hours ago

This website uses cookies.