தமிழகம்

அஜித் சொல்லி விஜயைப் பார்க்க போனாங்க.. பலியான இளைஞரின் தாய் கதறல்!

தவெக மாநாட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தது குறித்து இதுவரை கட்சித் தரப்பில் எதுவும் கேட்கவில்லை என உறவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை: விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்.27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார்.

இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, செயல் திட்டங்கள், கொடி விளக்கம், தவெக பெயர்க் காரணம், அரசியல் நிலைப்பாடு, அரசியல் எதிரி என அனைத்தையும் தனது சுமார் 50 நிமிட உரையின் மூலம் நிகழ்த்தினார்.

இதனிடையே, நேற்று மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் பைக், கார், வேன், பேருந்து, ரயில் என பயணம் செய்து வந்தனர். அந்த வகையில், சென்னை மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனது நண்பருடன் சேர்ந்து பைக்கில் மாநாட்டிற்காக புறப்பட்டு உள்ளார்.

அப்போது, தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நேற்று நடந்தது மாநாடு அல்ல…. சினிமா பட ஷூட்டிங்..பாஜகவின் C TEAM தான் த.வெ.க : திமுக அமைச்சர் கதறல்!

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த இளைஞரின் உறவினர், “அன்று இரவு தான் ஈசிஆரில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். நாளை விஜய் மாநாட்டுக்குச் செல்ல உள்ளதாக என்னிடம் கூறினான். நீ அஜித் ரசிகர், ஏன் அங்கு செல்கிறாய் எனக் கேட்டேன்.

எங்க தலயே சொல்லிட்டாரு, நான் போவேன் என கூறினான். பின்னர், அவனது தங்கையிடம் பேசினான். இதனையடுத்து, காலை செல்வதாக கூறிவிட்டுச் சென்றான். அவன் சென்ற 20வது நிமிடத்தில் இறந்துவிட்டான் என எனக்கு போன் கால் வந்தது. அவனுக்கு அப்பா – அம்மா இல்லை.

ஒரு தங்கை மட்டுமே. பெரியம்மாவகிய என்னிடமே அவன் வளர்ந்து வருகிறான். இந்தச் செய்தியைக் கேட்டதும் என்னாலும் முடியவில்லை, அவனது தங்கையாலும் முடியவில்லை. இது குறித்து இதுவரை தவெகவில் இருந்து யாரும் எதுவும் பேசவில்லை. அவனுடன் சென்ற மற்ற யாரும் இன்னும் ஊர் திரும்பவில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.

மேலும், இவரைத் தவிர, ரயிலில் இருந்து விக்கிரவாண்டி அருகே குதித்த ஒருவரும், கார் விபத்தில் மற்ற இருவரும் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

3 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

4 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

4 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

4 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

5 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

5 hours ago

This website uses cookies.