கன்னியாகுமரி : தமிழக முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பதிவிட்ட புகாரில் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட சூழால் சங்குருட்டி பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(வயது 45 ). இவர் முன்னாள் ராணுவ வீரர்.
தற்பொழுது தென்காசி மாவட்டம் ஆதிதிராவிட நலத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் திராவிட இயக்கத் தலைவர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி உட்பட பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்களை மிக அருவருக்கத்தக்க வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் இதுபோன்று பல வீடியோக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் மோதலை உருவாக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூராக பதிவிட்ட ஓட்டுநர் சஜிகுமார் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசியில் இருந்த அவரை கைது செய்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.