அவதூறு பேச்சு… 14 நாள் நீதிமன்ற காவல் : மணியன் பேசிய வீடியோ.. எஸ்.டி.பி.ஐ. திடீர் வேண்டுகோள்!!!
எஸ்.டி.பி.ஐ. மநிலத் தலைவர் நெல்லை முபாரக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாநில நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசும் காணொளி ஒன்றில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவதூறு செய்ததோடு, மிகவும் மோசமான முறையில் ஒருமையில் விமர்சித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, திருவள்ளுவர் குறித்தும் ஒருமையில் பேசியுள்ளார். அதோடு பட்டியலின சமூகங்கள் குறித்து சாதி ரீதியாகவும் அவர் இழிவாகப் பேசியுள்ளார்.
ஆன்மிக பேச்சாளர் என்கிற போர்வையில் ஆர்.பி.வி.எஸ். மணியனின் பேசிய இந்த மோசமான காணொளி சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.
தேசம் போற்றும் அம்பேத்கர் குறித்தும், தமிழர்கள் போற்றும் திருவள்ளுவர் குறித்தும் மிகவும் இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியனை பெயரளவுக்கு கைது செய்து விட்டுவிடாமல், அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அவர் பேசிய அந்த காணொளியை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபகாலமாக அம்பேத்கர் தொடங்கி, சமூக நீதிக்காக உழைத்திட்ட தலைவர்கள் மற்றும் சமூகங்களை குற்றப்படுத்தியும், அவர்களை இழிவுப்படுத்தும் போக்குகளைக் கொண்டும் தமிழகத்தில் அரசியல் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
பாஜகவின் எச்.ராஜா போன்றவர்கள் தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து கொச்சையாக இழிவுப்படுத்தி வருகிறார். இத்தகைய போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே இத்தகைய போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால், எல்லோருக்கும் பொதுவான சமூகநீதி அரசு, இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.