கோவையில் களைகட்டிய ஜனநாயகத் திருவிழா.. பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை.. வாக்களித்தவர்கள் யார்? யார்?!
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி, கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித தடங்களும் இன்றி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு, கண்காணிப்பு குழு மூலமாக அனைத்து வங்கி பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஜி பே எனப்படும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில், அதிகமாக பண பரிவர்த்தனை எந்த கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அர்ஜுன்சம்பத் கோவை தெற்கு தொகுதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஒக்கிலியர் காலனி பகுதியில் எனது வாக்கை பதிவு செய்தேன். நமது நாட்டின் ஜனநாயகம் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.
மேலும் படிக்க: விடிஞ்சா தேர்தல்.. கிளாம்பாக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக நள்ளிரவில் நடந்த திடீர் போராட்டம்.!!
பல்வேறு வாக்குச்சாவடியில் முதியோர்களுக்கு வீல் சேர் இருந்தும் அவர்களை அழைத்துச் செல்ல உறுப்பினர்கள் இல்லாததால் அனைத்து முதியவர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்ய சிரமம் மேற்கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்து செல்கின்றனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் உள்ள சேரன் மாநகர் அரசினர் நடுநிலைப் பள்ளியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் எம்எல்ஏ அவர்கள் பாகம் எண் 387 இல் அமைக்க பெற்றுள்ள வாக்கு சாவடி மையத்தில் முதல் வாக்காக தனது வாக்கினை குடும்பத்தாருடன் சென்று பதிவு செய்தார்.
கோவை பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆறு மூக்கு பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை சி.பி.ஐ.எம். – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.