Categories: தமிழகம்

அச்சுறுத்தும் டெங்கு.. தினமும் 500 முதல் 600 பேர் வரை பாதிப்பு; வார்னிங் கொடுத்த அமைச்சர்..!

தினமும் 500 முதல் 600 பேர் வரை டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று 252 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை,  நகராட்சித் துறையை சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னையில்  நடைபெற்றது. ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற  கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், மாநில அளவில் மழை கால தொற்று நோய்கள் டெங்கு போன்ற நோய்களை தடுக்க மாநில அளவிலான டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாளை முதல் துறைகள் ஒருங்கிணைப்பு அந்தந்த சுகாதார மாவட்டங்களிலும் 11 துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்றிணைத்து பணி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை 11,538 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு வருவதில்லை. அதனால், அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. தினமும் 500 முதல் 600 பேர் வரை டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி  வருகின்றனர். நேற்று 252  பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.

நீட்டும் வேண்டாம், நெக்ஸ்டும் வேண்டாம் என்பது தான் தமிழ்நாட்டின் கொள்கை:

மேலும் பேசுகையில், பொது சுகாதாரத் துறை மூலமாக ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளுக்கு நெறிமுறைகள் வழங்கி இருக்கிறோம். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை இறுதிக்கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி பெறுபவர்கள் குறித்த தகவல் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மருத்துவ பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படும் இடங்களில் தேவையான ஆட்கள் போட நடவடிக்கை எடுக்கப்படும்.

“தமிழ்நாட்டில் 11,538 பேருக்கு  இந்த ஆண்டில் இதுவரை டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 பேர் மட்டுமே  உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்றாலும் உயிரிழப்பை குறைக்க முடிந்ததற்கு துறையின் நடவடிக்கைகளே காரணம். நான் எப்போதுமே நோய் பாதிப்புகளின் போது எண்ணிக்கையை ஒருபோதும் குறைத்துக் காட்டக் கூடாது என்று அதிகாரிகளிடம் வலியுறுத்துவேன். அப்போது தான் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். எண்ணிக்கை அதிகம் என்றால் ஒருவரையும் விட்டுவிடாமல் கண்காணித்து சிகிச்சையளிக்கிறோம் என்று பொருள்.

கடந்த ஆட்சியில் நடந்த காலரா மரணங்களை கார்டியாக் அரெஸ்ட் என்று கணக்கு காட்டினார்கள். நான் கண்டித்து அறிக்கை கொடுத்தேன். காலரா இறப்புகளை  காலரா இறப்புகள் என்று சொன்னால் தானே மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். நோய் புள்ளி விவரங்களை எப்போதும் மறைக்கக் கூடாது. மறைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த ஆண்டில் இன்னும் மாதங்கள் உள்ளன. ஏற்கனவே ஏற்பட்ட 4 இறப்புகளுடன் இதற்கு மேல் டெங்கு இறப்புகள் ஒன்று கூட  ஏற்படாமல் தடுக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் தெரிந்தோ தெரியாமலோ டெங்கு நோயாளிகள் இருந்தால் அவர்களையும் கண்காணிப்பது,  வீடு வீடாக சென்று டெங்கு கொசுவிற்கான Source இருந்தால் கண்டறிந்து அழிப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.” என்றார்.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

7 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

7 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

7 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

8 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

9 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

9 hours ago

This website uses cookies.