விழுப்புரத்தில் நடைபெற்ற வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றாத தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பாமகவினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் ஆர்ப்பாட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு உணவு சாப்பிடுவதற்காக அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
பாமகவினர் ராமதாசை காண உள்ள நுழைய முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் இரும்பு கதவுகளை அடைத்து அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது காவல்துறையினருக்கும் பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படியுங்க: வருங்கால முதலமைச்சர் விஜய்.. பெரியாருக்கு மரியாதை செலுத்தும் போது தவெக கோஷம்!!
உடனே பாமகவினர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடு முயன்றனர். அப்போது ஒரு சிலர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கிழித்ததால் மேலும் பதற்றம் நீடித்தது.
பின்னர் காவல்துறையினர் பாமக தொண்டர்களை சமாதானம் செய்து பாமக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போஸ்டரை கிழித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.