Categories: தமிழகம்

சிறைவாசத்தில் இருந்த போது முளைத்த திருமண ஆசை : லிவ்விங் டூகெதர் தான் பண்ணுவேன்.. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை!!!

சிறைவாசத்தில் இருந்து போது முளைத்த திருமண ஆசை : லிவ்விங் டூகெதர் தான் பண்ணுவேன்.. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை!!!

கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் அதிக சிசி உள்ள வாகனங்களை இயக்கி அதை வீடியோவாக பதிவிட்டு தனது யூடியூப் சேனலில் பதிவிடுவார்.

இவருக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அது போல் இவர் வெளியே வந்தால் இவரை காண சினிமா நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதை போல் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் டிடிஎஃப் வாசன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீலிங் செய்த போது அவர் நிலைத்தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டு விழுந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பாலுசெட்டிசத்திரம் போலீஸார் கைது செய்தனர்.

சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் அவர் 40 நாட்கள் கழித்து வெளியே வந்தார். தனக்கு 10 ஆண்டுகளுக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் ரத்தானது நியாயமே இல்லை என தெரிவித்திருந்தார்.

அது போல் அவருடைய தாயாரும், இதுபோல் பெற்றவர்களை பிள்ளைகள் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அலைய வைக்காதீர்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு சோசியல் மீடியா பக்கம் வந்த டிடிஎஃப் வாசன் கூறிய கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வாசன் கூறுகையில் எனக்கு 40 நாட்கள் சிறை வாசம் பல அனுபவத்தை தந்தது. ஆனால் சிறை வாழ்க்கையில் இருந்த எனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது.

கனவு கார் வாங்கிவிட்டு வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்டு பிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்தேன். ஆனால் எனக்குள் பல கனவுகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி திருமண ஆசை வந்துவிட்டது.

இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன். அதிலும் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன். 3 மாதம் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு கல்யாணம் செய்ய வேண்டும்.ஏனென்றால் வாழ்க்கையில் நிறைய பார்த்துவிட்டேன் என்றார்.

ஏற்கனவே இவர் செய்த செயல்களுக்கு நீதிபதி கடும் கோபத்துடன் இவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். தற்போது ஜாமீனில் வந்தும் அடக்கி வாசிக்காமல் லிவிங் டுகெதர் குறித்து பேசியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.