பழனி முருகன் கோவிலுக்காக ரூ.26 லட்சத்தில் பேருந்து வழங்கிய பக்தர் : இனி பக்தர்களுக்கு இலவச பயணம்..!!
பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் கடந்த இரண்டு மாதமாக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மூன்று கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து சென்று முருகனை தரிசிக்க மலை மீது செல்கின்றனர்.
மேலும் குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளி பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பேட்டரியில் இயங்கும் கார்கள், ஒரு மினி பேருந்து இலவசமாக இயக்கி வருகிறது.
இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலப் பாதையில் எளிதாக சென்று வர பழனியைச் சேர்ந்த ஜவகர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ரூபாய் 26 லட்சம் மதிப்பிலான பேருந்து வாங்கி பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
பாத விநாயகர் கோயில் முன்பு பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேருந்தை பெற்றுக் கொண்டார். பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் இந்த பேருந்து இலவசமாக இயக்கப்படவுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.