Categories: தமிழகம்

போர்க்களமாக மாறிய கோவில் வளாகம் : பழனியில் பரபரப்பு.. இருதரப்பு பக்தர்கள் மோதலால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று கோவை மற்றும் எடப்பாடி ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர்.

பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய சென்றபோது, அங்குள்ள கோவில் நுழைவாயிலில் நின்று கோவையை சேர்ந்த பக்தர்கள் சிலர் மேளம் அடித்து கொண்டிருந்தனர்.

அப்போது எடப்பாடியை சேர்ந்த காவடி பக்தர்களும் மேளம் அடித்துக்கொண்டே வந்தனர். இதையடுத்து இடைப்பாடி பக்தர்களை மேளம் அடிக்கக்கூடாது என்று கோவை பக்தர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.

ஆனால் மேளம் அடிப்பதை நிறுத்தாமல் எடப்பாடி பக்தர்கள் தொடர்ந்து மேளம் அடித்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தகராறு ஏற்பட்டு கோவையை சேர்ந்த பக்தர்களை கோவிலில் இருந்து வெளியேற்றி கோவில் நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை எடப்பாடி பக்தர்கள் பூட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோவை பக்தர்கள் அப்பகுதியில் இருந்த கடைகளில் இருந்த தேங்காய், கற்கள் மற்றும் கட்டைகள் ஆகியவற்றை கொண்டு தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து திரு ஆவினன்குடி கோவிலுக்கு வந்த அடிவாரம் போலீசார் கோவில்‌ முன்பு தகராறில் ஈடுபட்ட பக்தர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து காயமடைந்த எடப்பாடி பக்தர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி கோவிலில் இருதரப்பு பக்தர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.