திண்டுக்கல் : பழனி கோவிலில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக இரவு 10மணி முதல் காலை 5மணிவரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்துசய்யப்பட்டது. மேலும் இன்றுமுதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று பழனி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் இன்று பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வெள்ளிக்கிழமையான இன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என நேற்று இரவு தாமதமாக அறிவித்ததால் கோவிலில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.