தாராபுரம் அருகே திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர் சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவையோடு ஏற்றி வந்த லாரி ரத்தினகுமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதிக்கு வந்தபோது, சாலையோரம் இருந்த கலாமணியின் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இதில் கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி (62) மற்றும் குப்பன் (70) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் ரத்தினகுமார் (28) தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், டீக்கடையில் அமர்ந்திருந்த தாராபுரத்தை அடுத்த நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் (20), சூரியநல்லூரை அடுத்த குப்பண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (67), செல்லமணி (64) முத்துச்சாமி (60) சூரியநல்லூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (46) காயம் ஏற்பட்டது. ஐந்து நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அழைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான குண்டடம் போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.