தர்மபுரி : அரூர் அருகே தொடர் திருட்டு – வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 28 லட்சம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அச்சல்வாடி கிராமத்தில் குமரேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். கீரைப்பட்டி கிராமத்தில் தன்னுடைய சகோதரிக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு விற்பனை செய்துள்ளனர்.
அதற்கு முன் பணமாக ரூபாய் 25 லட்சம் பெற்றத் தொகையும், மாடு விற்பனை செய்த ரூபாய் 3 லட்சம் என மொத்தம் 28 லட்சமும், ஒன்பது பவுன் தங்க நகைகளையும் பீரோவில் வைத்துள்ளனர்.
இந்த நிலையி,ல் நேற்று இரவு குமரேசன் மற்றும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு, தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்பு, தனது வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும், உள்ளே சென்று பார்க்கும் பொழுது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கணவன், மனைவியும் உறவினர் வீட்டுக்கு சென்றதை பயன்படுத்திக் கொண்டு, நோட்டமிட்டு இருந்த மர்ம நபர்கள் பூட்டிக் கிடந்த பூட்டை உடைத்து வீட்டினுள் பணம் மற்றும் தங்க நகைகளையும் திருடி சென்றுள்ளனர். அப்போது, தடயங்கள் எதுவும் கிடைக்கப் பெறாத வகையில், மிளகாய் பொடியை வீட்டில் பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் தூவி சென்றுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடி சம்பவம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக அரூர் வட்டாரத்தில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு மன குழப்பத்தையும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் ஏற்படுத்தியுள்ளது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.