தர்மபுரி மாவட்டம் நகர பகுதியில் அடுத்தடுத்த நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் நகர பகுதியில் சாலை விநாயகர் ரோடு பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் ஒரு மருந்தகம், இரண்டு பாத்திர கடைகள் மற்றும் ஒரு ஆட்டோ மொபைல் கடை என நான்கு கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை கடைகளில் கல்லா பெட்டிகள் திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைகளின் உரிமையாளர்கள் பூட்டிய கடைகளுக்குள் எப்படி பணம் திருடுபோனது என அதிர்சியில் இருந்த கடை உரிமையாளர்கள் தேடி பார்த்த பொழுது மேற்கூரைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கடை உரிமையாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடைகளில் நுழைந்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் சுமார் 25 வயதுடைய இளைஞர் முகத்தை மூடியவாறு கடைகளுக்குள் மேற்கூரையில் இருந்து இறங்கி சென்று பணத்தை திருடி செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதில் மூன்று கடைகளில் பெரியளவில் பணம் இல்லாமல் ரூ.ஐந்தாயிரத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. அந்த பணம் மற்றும் உண்டியலில் இருந்த பணம் மற்றும் பாத்திர கடையில் சுமார் 3 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதனை திருடிச் சென்றுள்ளார்.
மேலும் இந்த கடைகளில் வைத்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அநத பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களை வைத்து தர்மபுரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி நகர காவல் நிலையம் மற்றும் மதிகோண்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.