Categories: தமிழகம்

காதல் கேட்குதா உனக்கு.. பேச்சு கொடுத்து கொண்டே சதக்.. சதக்.. பிரியாணி கடை ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து..!

தர்மபுரி ஜெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்த வர் ஜாவித் மகன் முகமது ஆசிப்(27). இவர் டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார். இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த மாதம் இலக்கியம்பட்டியில் உள்ள பிரபலமான பிரியாணி கடையில் வேலைக்கு சேர்ந்து பணி யாற்றி வந்தார். நேற்று இரவு, வழக்கம் போல் வேலை செய்து கொண்டு இருந்த போது, திடீரென கடைக்குள் புகுந்த 4 பேர் கும்பல், ஆசிப்பை கத்தி யால் சரிமாரியாக குத்தி விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.

இதனால், கடையில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆசிப்பை, உடன் வேலை செய்ப வர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து தர்மபுரி டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு நடத்தினர். இதனிடையே, மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

முதற் கட்ட விசாரணையில் ஆசிப், காதல் விவகாரத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நேற்று இரவு தர்மபுரி நகரில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.