தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் முத்தையன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சில்லாரஹள்ளி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி இருவரும் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
சான்றிதழ்களின் தன்மையைப் பொருத்து லஞ்சப்பணம் குறைவாகவும், அதிகமாகவும் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முதியவர்களிடம் ஒரு மனுதாரரிடம் 5000 வரை கொடுத்தால் மட்டுமே அந்த மனுக்களை பரிந்துரை செய்வதாகவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாரிசு மற்றும் ஆதரவற்ற விதவை சான்றிதழ் சுமார் 50,000 ரூபாய் வரையிலும், நிலம் அளவீடு செய்யும் பணிக்கு 10 ஆயிரம் வரையிலும் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் கேட்கும் படி லஞ்சப் பணம் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு வேலை செய்து கொடுக்காமல் நீண்ட நாட்களாக அலை கழிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, கிராம நிர்வாக அலுவலர் இலஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை நடத்த அரூர் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கோட்டாட்சியர் முத்தையன் நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானது.
இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரூர் கோட்டாட்சியர் முத்தையன் உத்தரவிட்டார். மேலும், உதவியாளர் ஜெயந்தி பணியிடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில்லாரஹள்ளி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் வருவாய் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.