தர்மபுரி ; பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் மொரப்பூர் பகுதி மாணவி 2ம் இடம் பிடித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதில், மாநில அளவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியை சேரந்த மாணவி ஹரிணிகா, 200 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார். இவர் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
மேலும், பொறியியல் கல்லூரி மாணவிகளின் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மோகன்- திலகம் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சிகளை பரிமாறி கொண்டனர்.
மேலும், பள்ளிகள் அளவில் 12 ஆம் வகுப்பில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடம் பெற்றுள்ள நிலையில், தற்பொழுது பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு ஊக்கம் அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எனது தாத்தா தான். ஆனால் அவர் இப்போது இல்லை. இந்த சந்தோஷத்தை பார்ப்பதற்கு எனது தாத்தா இல்லை என்பது வருத்தமாக உள்ளதாக மாணவி ஹரிணிகா தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.