தர்மபுரி ; பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் மொரப்பூர் பகுதி மாணவி 2ம் இடம் பிடித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதில், மாநில அளவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியை சேரந்த மாணவி ஹரிணிகா, 200 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார். இவர் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
மேலும், பொறியியல் கல்லூரி மாணவிகளின் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மோகன்- திலகம் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சிகளை பரிமாறி கொண்டனர்.
மேலும், பள்ளிகள் அளவில் 12 ஆம் வகுப்பில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடம் பெற்றுள்ள நிலையில், தற்பொழுது பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு ஊக்கம் அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எனது தாத்தா தான். ஆனால் அவர் இப்போது இல்லை. இந்த சந்தோஷத்தை பார்ப்பதற்கு எனது தாத்தா இல்லை என்பது வருத்தமாக உள்ளதாக மாணவி ஹரிணிகா தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.