போதும்… இதோட நிறுத்திக்கோ… 2வது கள்ளக்காதலனுடனான உறவை துண்டிக்கச் சொன்ன முதல் கள்ளக்காதலன் அடித்துக் கொலை : பெண் கைது..!!

Author: Babu Lakshmanan
14 May 2022, 10:43 pm
Quick Share

தருமபுரி அருகே கள்ளக்காதலை கைவிட சொன்ன முதல் கள்ளக்காதலைனை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிய பெண் மற்றும் 2-வது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி அடுத்த சவூளுர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் நல்லம்பள்ளி அடுத்த பூகனஹள்ளியை சேர்ந்த மாது(45) என்பது தெரியவந்தது. மாது கடந்த 10 ஆண்டுகளாக தருமபுரியில் உள்ள மைக் செட் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது மாதுக்கும், சத்யாநகரை சேர்ந்த தனியார் பள்ளி சமையலராக பணியாற்றி வந்த சித்ரா(40) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சித்ராவுக்கும், அவர் பணியாற்றி வரும் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியில் சேர்ந்த வடக்கு கொட்டாவூரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (41) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் முதல் கள்ளக் காதலனான மாதுவுக்கு தெரிந்துள்ளது. இதனால், சித்ராவுக்கும், மாதுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஓட்டுநருடன் உள்ள கள்ளக்காதலை கைவிடுமாறு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணனிடம், சித்ரா பிரச்சினையை தெரிவித்துள்ளார். அப்பொழுது சித்ராவும், இரண்டாவது கள்ளக்காதலன் கிருஷ்ணனும், மாதுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த, 9 தேதி இரவு வழக்கம் போல் மாது, சித்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது சித்ரா, கிருஷ்ணனை தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். அப்பொழுது கிருஷ்ணன் அவர் பணியாற்றுறம் பள்ளிக்கு சென்று பள்ளி பேருந்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, சட்டையின் பின்புறம் முதுகில் மறைத்து வைத்து கொண்டு சித்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது மாதுவிற்க்கும் சித்ரா இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் அங்கு வந்த கிருஷ்ணன், இரும்பு கம்பியால் மாதுவின் பின் பக்க தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாது, இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையைடுத்து இறந்த மாதுவின் உடலை சித்ராவின் இருசக்கர வாகனத்தில் வைத்து இருவரும் எடுத்து சென்று தருமபுரி பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சவூளுர் மேம்பாலம் அருகே வீசி விட்டு சென்றது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சித்ரா மற்றும் கிருஷ்ணன் இருவரையும் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தருமபுரி அருகே இரண்டாவது கள்ளக் காதலை கைவிட சொன்ன, முதல் கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து, சாலையோரம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 825

0

0