அரூரில் பட்டப் பகலில் ஆசிரியை உட்பட மூன்று பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபரை கள்ளக்காதலியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரிப் மனைவி பேகம், 58 வயதுடைய இவருடைய கணவர் உயிரிழந்த நிலையில், தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கீழ் வீட்டில் பேகம், குடியிருந்து வந்த நிலையில், மேல் வீட்டை ஷகிலாபானு என்பவருக்கு கடந்த ஒன்றறை வருடங்களுக்கு முன்பு குடியிருப்பதற்காக வாடகைக்கு கொடுத்துள்ளார்.
ஷகிலாபானுவின் கனவர் சாதிக்பாஷா, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், பேகம் என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். குடியிருந்த நாள் முதல் இன்று வரை மூன்று மாதங்கள் மட்டுமே வாடகை பணம் கொடுத்ததாகவும், மீதம் உள்ள மாதங்களுக்கு வாடகை பணம் கொடுக்காத நிலையில், வீட்டின் உரிமையாளர் பேகம் இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பேகத்திற்கும், ஷகிலாபானுவிற்கும் வீட்டு வாடகை பணம் தொடர்பாக வாய்தகராறு ஏற்பட்டதால், ஷகிலாபானுவின் கள்ளக்காதலன் பாஷாவை வரவழைத்துள்ளார். வீட்டின் உரிமையாளர் பேகத்திடம் குடிபோதையில் வந்த பாட்ஷா, சத்தமிட்டு தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார்.
அப்போது, எதிர் வீட்டைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெரின்தாஜ் என்பவர் பண்டிகை நாட்களில் வம்பு செய்கிறீர்கள் என்று கேட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த பாஷா, மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ஜெரின்தாஜ் கழுத்தில் வெட்டியுள்ளார். மற்றும் வீட்டின் உரிமையாளர் பேகத்தையும் முதுகிலும் வெட்டியுள்ளார்.
இதைப் பார்த்த அதே வீட்டில் குடியிருந்த ஜான்பாஷா மனைவி ஷகிலா (38) என்பவர் தடுக்க முற்படும்போது அவரையும் கையில் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளார். மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜெரின்தாஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பேகம் அளித்த புகாரின் பேரில், அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை வெட்டிவிட்டு தப்பியோடிய பாஷாவை நேற்று இரவு கைது செய்து, அவருக்கு தூண்டுதலாக இருந்த ஷகிலா பானுவையும் கைது செய்தனர். குடிபோதையில் வெட்டிய பாஷாவை இன்று அரூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், பாட்ஷாவிற்கு தூண்டுதலாக இருந்த சகிலாபானுவை சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.