தவறான சிகிச்சையால் நர்சிங் கோமாவிற்கு சென்ற நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், கோட்டாச்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே சோலைக்கொட்டாய் லாலாக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ். இவரது மகள் காயத்ரி (18), நல்லம் பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்த காயத்ரி வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து, அவரை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு ஒட்டுக் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு, காயத்ரி மயக்க நிலைக்கு சென்றார். இதையடுத்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது, காயத்ரி சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், காயத்ரியின் தந்தை தங்கராஜ் மற்றும் உறவினர்கள், ஊர் பொது மக்கள் திரண்டு வந்து தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தங்கராஜ் கூறியிருப்பதாவது: எனது மகள் காயத்ரி, முதலாமாண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வயிறு வலிப்பதாக கூறிய தால், தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தோம். அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக் குடல் கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து எனது மகள் மயக்கமடைந்தார். உடல்நிலை மிகவும் மோசமானது. தர்மபுரி, சேலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. எனது மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் காயத்ரியை நேரில் பார்வையிட்டு, அவரது பெற்றோரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கோமாவில் இருந்த மாணவி உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.