தருமபுரியில் தண்ணீர் தாகத்திற்கு பன்னீர் சோடா வாங்கி குடிக்க முற்பட்ட பொழுது, பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஒரு கடையில் வெயிலின் காரணமாக, அந்த பகுதியை கபில் என்பவர் பைக்கில் கடந்து செல்லும் பொழுது, தாகத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர், வீட்டிற்கு வந்த பிறகு சோடா குடிக்க முற்பட்ட பொழுது பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், பன்னீர் சோடா பாட்டிலை குலுக்கி பார்த்த பொழுது மிகவும் கலங்கலாக இருந்துள்ளதை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கபில் கூறும் பொழுது, “நல்ல வேளை இதை நான் குடிக்கவில்லை. ஆனால் சிறுவர்கள் யாராவது வாங்கி இதனை குடித்து இருந்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்து இருப்பார்கள். ஆகவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் தர சோதனை மேற்கொள்ளும் பொழுது, உணவு பொருட்களை மட்டுமே ஆய்வு செய்கின்றனர்.
பேக்கிங் பொருட்கள் குளிர்பானங்களை ஆய்வு செய்ய தவறி விடுகின்றனர். அவற்றையும் இனி வரும் காலங்களில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.