மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொறுத்த வரை பாஜக கூட்டணியை அதிக இடங்களை கைப்பற்றும் என பல நிறுவனங்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் பெரும்பான்மை இடங்களை பெறும் என்றும், ஓரிரு தொகுதிகள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் செல்லலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முதல் சுற்று முடிவில் முன்னணியில் இருக்கிறார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்த பாமக 10 தொகுதியில் போட்டியிட்டுள்ளது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மனைவி பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு என்னும் மையத்தில் இருந்து முதல் சுற்று வாக்குகள் முடிவு வெளியாகி உள்ளது. அதில், சௌமியா அன்புமணி 5,801 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக திமுக சார்பில் போட்டியிட்ட ஏ கே மணி 2,161 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலுத், அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகன் 1,855 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 407 வாக்குகள் பெற்றுள்ளார். தர்மபுரி பாமக நட்சத்திர வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை பெற்றுள்ளது பாமக தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.