தர்மபுரி அருகே பாலியல் புகாரில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வந்தவர் சகாதேவன் (வயது 55). இவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், நேற்று பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் சகாதேவனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.
பாலியல் புகாரில் சிக்கி, கைதாகி உள்ள சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சகாதேவன் மீது ஏற்கனவே சில புகார்கள் எழுந்தன. இவர் பணியில் இருந்த போது, தர்மபுரி மாவட்ட பல்வேறு காவல் நிலையங்களில், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனங்களை தன்னிச்சையாக செயல்பட்டு தனியாருக்கு விற்பனை செய்ததாக, விதிகளை மீறி, வேறு நபர்களுக்கு விற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.