சந்துக்கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் கடையின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்.
தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் காவல்துறையினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதியமான் கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இருந்து மொத்தமாக சந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறை துறையினர் மற்றும் டாஸ்மார்க் மேலாளர் விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் அரசு மதுபான கடை 2821 என்ற கடையில் பணிபுரியும் கோவிந்தன் மற்றும் முருகள் ஆகிய 2 சூப்பர்வைசர்களும், சதாசிவம், சரவணன், ராமதாஸ், திருமால், தீர்த்தராமன் உள்ளிட்ட 7 பேரும் கள்ளதனமாக விற்பனை செய்யும் சந்து கடைகளுக்க விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேரையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
This website uses cookies.