சந்துக்கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் கடையின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்.
தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் காவல்துறையினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதியமான் கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இருந்து மொத்தமாக சந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறை துறையினர் மற்றும் டாஸ்மார்க் மேலாளர் விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் அரசு மதுபான கடை 2821 என்ற கடையில் பணிபுரியும் கோவிந்தன் மற்றும் முருகள் ஆகிய 2 சூப்பர்வைசர்களும், சதாசிவம், சரவணன், ராமதாஸ், திருமால், தீர்த்தராமன் உள்ளிட்ட 7 பேரும் கள்ளதனமாக விற்பனை செய்யும் சந்து கடைகளுக்க விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேரையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.