தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நவலை ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் மற்றும் பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர், நவலை, ஆர்.கோபிநாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நவலை பகுதியைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் முனியப்பன் தனது வீட்டின் மீது வேலை செய்து முடித்து கீழே இறங்கும் பொழுது, இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… யூடியூபர் பெலிக்ஸ் மீதும் கோவை போலீசார் நடவடிக்கை..!!
அதேபோல் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மனைவி சித்ரா பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது, தென்னை மரத்தின் மீது இடி மின்னல் தாக்கி பின்பு பசு மாட்டின் மீதும் பால் கறந்து கொண்டிருந்த சித்ரா மீதும் இடி மின்னல் விழுந்ததில், பசு மாடும், சித்ராவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இருவரின் உடலையும் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தாலும், பசு மாடு உயிரிழந்த சம்பவத்தாலும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.