அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா சி.வி.சண்முகம்? போலி கடிதம் : பரபரப்பு புகார்!!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மாலையோடு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 6கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடி உள்ள நிலையில் 44800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை பிரச்சாரத்தை முடித்துள்ள நிலையில், தற்போது சமூகவலைதளத்தில் பொய்யான தகவல்களை ஒரு சிலர் பரப்பி வருகின்றனர்.
மேலும் பழைய வீடியோக்களை எடிட் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக சார்பாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாக்கியராஜ் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிருப்தியில் இருப்பதாக பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பான சி.வி.சண்முகம் பெயரில் கடிதம் ஒன்றும் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில்,விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் நிறுத்தபட்டத்தில் தனக்கு விருப்பம் இல்லாத போல் எடப்பாடி பழனிசாமிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கடிதம் எழுதியதை போல் சமூக வலை தளத்தில் ஒரு கடிதம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: வீடு வீடாக பணம் விநியோகம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் VIDEO : கள்ளக்குறிச்சியில் களேபரம்.!!
இதன் காரணமாக விழுப்புரம் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது போலியான கடிதம் என்றும் வாக்காளர்களை திசை திருப்ப மேற்கொள்ளப்பட்டதாக கூறி அதிமுக வழக்கறிஞர் தமிழரசன், ராதிகா செந்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் சிவி சண்முகம் அளித்தது போன்று பொய்யான அறிக்கை தயார் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.