தமிழகம்

தமிழகத்தில் திமுக கூட்டணிகள் திருடித்தான் வாக்குகளை பெற்றதா? வாக்கு திருட்டை பற்றி காங்., பேசலாமா?

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் வெளிநாடு சென்று விட்டு இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று நமது பலத்தை காண்பித்து வந்திருக்கிறார். இதனால் தான் நமது டாடியாக முதலீடுகளை ஈர்க்க முடிகிறது.

இதற்கு முன்பு சென்ற போது எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார்கள்.
தமிழகத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு தெளிவான கணக்கு கிடையாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்தால் நாம் பாராட்டப்படுவோம் என்று காவல்துறை அதிகாரிகள் நினைத்துக் கொள்கிறார்கள்.

காங்கிரசை சேர்ந்தவர்கள் நேற்று தென்பகுதியில் ஓர் கூட்டம் போட்டிருக்கின்றனர். கூட்டம் போடுவதற்காகவாவது தென் மாவட்டம் நியாபகம் வந்திருக்கிறதே.

ஓட்டு திருடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்து கள்ள ஓட்டிற்கு மிகப் பிரம்மாண்டமான அங்கீகாரத்தை கொடுத்தது திமுக தான். கள்ள ஓட்டை கலாச்சாரமாக மாற்றிய திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு சிதம்பரம் பேசுகிறார்.

செல்வப் பெருந்தகை கூட்டணியை விட்டு வெளியே வர தைரியம் இருக்கிறதா?
கம்யூனிஸ்டுகள் கொள்கையை மறந்து திமுகவுடன் இருக்கிறது.

திருமாவளவனுக்கு பட்டியலின சமூகத்தினரை காலில் விழ வைத்தாலும் கவலை கிடையாது. வேங்கை வயல் பிரச்சனையை பற்றி கவலை கிடையாது.

கூட்டணிக்காக கட்சிகளின் கொள்கை மறக்கடித்து திமுக அவர்களுடன் வைத்துள்ளது. நாளை, பாரத தேசத்தின் துணை குடியரசு தலைவராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாளை மறக்க முடியாத தினம்.

திமுக காங்கிரஸ்சை மன்னிக்க முடியாத தினம்.தமிழர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்க்கு எதிராக திமுகவை சேர்ந்தவர்கள் வாக்களிக்க போகின்றனர்.

ஜெர்மனியில் தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுப்போம் என்று சொல்கிறார். டெல்லியில் எங்கு அதிகாரம் கொடுக்கிறீர்கள். தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இங்கு ஆட்சியில் அங்கு அரசியலில் ஸ்டாலினை வருங்கால தமிழ் சமூகம் மன்னிக்காது

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏவிடம் இருந்து 27 கிலோ தங்கம், 2000 கோடி பணம் கைப்பற்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
காங்கிரஸ் எல்லா திருட்டையும் செய்வார்கள் பிடிக்க போனால் பழிவாங்குகின்றனர் என்று சொல்வார்கள்.

வாக்குத்திருட்டு என்று சொல்கிறார்களே மக்களின் வரிப்பணத்தை திருடியது காங்கிரஸ். இன்று தமிழ்நாட்டில் ஏழு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.

அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளார்கள். அந்தக் கூட்டணி வலுவான கூட்டணி தான். அதிமுக உட்கட்சியில் சில பிரச்சனைகள் வந்தால் அதை அந்த கட்சி தீர்த்துக் கொள்ளும்.

ஆசிரியர் தினத்தில் நாங்கள் ஆசிரியர்களுக்கு பாதுகாவலராக இருப்போம் என்று சொல்கிறார்கள். ஆசிரியர்கள் போராடுகிறார்கள், மருத்துவர்கள் போராடுகிறவர்கள் . 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.