முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் வெள்ளிக் கவசத்தை வழங்கிய ஓபிஎஸ் தான் திருடிய பணத்தில் வைரத்திலேயே கவசம் அளிக்கலாம் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் பழனி சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் திரு ராஜசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை விந்தியா மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு அம்மா அவர்கள் கொடுத்த தங்க கவசத்தை மாட்டுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.
குறுக்கு வழியிலே அதற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை ஆனால் அம்மா அவர்கள் கொடுத்த தெய்வீக பொன் கலசத்தை முத்துராமலிங்கருக்கு சாத்தப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.
அம்மா கொடுத்த அந்த தெய்வீக பொன் கவசம் முத்துராமலிங்கத் தேவருக்கு போய் சேர வேண்டும் என எடப்பாடி அவர்கள் கூறினார். ஆனால் நேற்று நடைபெற்ற குருபூஜை விழாவில் வெள்ளியிலே கவசத்தை கொடுத்து ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையிலே நான் வழங்குகிறேன் என துரோகி சொல்லி இருக்கிறார் என ஓ பன்னீர் செல்வத்தை சாடை பேசினார்.
மேலும் அம்மா கொடுத்த தங்கத்திற்கு ஈடு வேறு என்ன இருக்கிறது? எண்ணத்திற்கு வெள்ளியில் கொடுக்கிறாய் கொள்ளையடித்த பணத்தில் வைரத்தில் ஆவது கொடு திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சாத்தப்பட்டு இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைப் போன்று முத்துராமலிங்கத் தேவருக்கும் தான் திருடிய பணத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் வைரத்தில் கவசத்தை வழங்கு.
ஆனால் தற்பொழுது அதைவிட கேவலமாக வெள்ளியிலே முத்துராமலிங்க தேவருக்கு கவசம் வழங்க வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது நீங்கள் என்ன தேவருக்கு வாரிசா என பேசினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.