திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 35). இவருக்கும், வீரைய்யா என்பவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. சில வருடங்களுக்கு முன்பு கணவன் வீரைய்யா, தனது தாய், தந்தை உதவியுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மேலும் காளியம்மாளின் நகைகளை பறித்துக் கொண்டதாகவும், தொடர்ந்து தன்னையும், தன் மகனையும் இழிவு படுத்தி வந்ததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், வழக்கிற்கும் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருவதாகவும் கூறி, காளியம்மாள் மற்றும் அவரது மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.