தமிழகம்

’பாஜகவின் கைத்தடி விஜய்’.. திண்டுக்கல் ஐ.லியோனி கடும் சாடல்!

பாஜகவின் கைத்தடியாக, திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய் செயல்படுகிறார் என திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் திமுக வடக்கு – தெற்கு நகரம் சார்பில், இளைஞரணிச் செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரும், திமுக நட்சத்திரப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி மேடையில் பேசினார்.

அப்போத் அவர், “ஒரு நடிகர் தனது மாநாட்டுக்காக ஏகப்பட்ட தலைவர்களுடைய படங்களை வைத்து பரபரப்பாக பேசிவிட்டு, 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திமுக இறுமாப்புடன் பேசி வருவதாக கூறினார். இப்படி திமுகவைப் பேசிய பல பேர் காணாமல் போய்விட்டனர்.

பாஜகவின் கைத்தடியாக, திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய் செயல்படுகிறார். இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டனர். ஜனவரி மாதம் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தவெகவுக்கு தாவல்? ஆதவ் அர்ஜூனா ஹிண்ட்.. திமுக அமைச்சரின் பல்டி!

ஆனால் கலந்தாய்வுக் கூட்டத்திலே ஏகப்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. தொண்டர்களிடையே (அதிமுக) ஏகப்பட்ட அதிருப்தி நிலவி வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அனைத்துக் கட்சிகளையும் தோற்கடித்து, 200 தொகுதிகளில் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.