திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியை சேர்ந்தவர் நல்லூ இவரது மகன் முத்துப்பாண்டி 38. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளன.
இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள லிபேரியாவில் போர்வெல் வாகனம் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை உடல்நிலை சரியில்லை என்று போன் செய்துள்ளார்.
அதன் பிறகு முத்துப்பாண்டியன் மனைவி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போர்வெல் உரிமையாளருக்கு தொடர்ந்து போன் செய்துள்ளனர்.
அவர்கள் போனை எடுக்கவில்லை என்றும் மதியம் மூன்று மணிக்கு மேல் போனை எடுத்து முத்துப்பாண்டி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர், மேலும் எதனால் உயிரிழந்தார் என்று உறவினர்கள் கேட்ட பொழுது அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும் உடலை உடனடியாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள் என்று உறவினர்கள் கூறிய நிலையில் முத்துப்பாண்டியன் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர முடியாது ஹைதராபாத்திற்கு முத்துப்பாண்டியன் உடலை கொண்டு வருகிறோம்.
அங்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்ததாகவும், இதையடுத்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டுக் கொண்டு வரக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: என் கணவர் நன்றாக ஆரோக்கியமாக தான் இருந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதாக கூறி, இறந்து விட்டதாகவும் எனக்கு தகவல் கூறினர். அவருடைய சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் .எனது கணவரின் உடலை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.