Categories: தமிழகம்

பைக் மெக்கானிக் ஓடஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை… இரு பிரிவினரிடையே முன்விரோதம்… நள்ளிரவில் நடந்த சம்பவம்!

செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியில், டூ வீலர் மெக்கானிக் நள்ளிரவில், ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால், பதட்டம் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, போடிகாமன்வாடி வடக்கு தெருவில் செந்தில்குமார் (42) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் செம்பட்டியில், டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் இவருக்கும், இடையே கடந்த சில ஆண்டுகளாக, கோவில் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவு செந்தில்குமார் வீட்டில் குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் திடீரென்று நுழைந்த, 10க்கும் மேற்பட்ட கும்பல், முன் விரோத காரணமாக, செந்தில்குமாரை கத்தியால் சரம் மாதிரியாக குத்தி உள்ளனர். இதில், உயிருக்கு பயந்து செந்தில்குமார் தெருக்கள் வழியாக, நள்ளிரவில் நடுத்தெருவிற்கு தப்பி ஓடி உள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து ஓடிய அந்த கும்பல், அவர் மீது சரமாரியாக கத்தியால் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்கல் நடத்து உள்ளனர். தகவல் அறிந்து செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை, 108 ஆம்புலன்ஸ்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செந்தில்குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், போடிகாமன்வாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமார் உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு, கவிதா (38) என்ற மனைவியும், நவனித் (12) சந்திப் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். செந்தில்குமாரை நல்ல இரவில் தெருக்களில் விரட்டிச் சென்று சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை, செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவத்தால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செந்தில்குமார் கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

7 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

8 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

9 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

9 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

10 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

10 hours ago

This website uses cookies.