செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியில், டூ வீலர் மெக்கானிக் நள்ளிரவில், ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால், பதட்டம் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, போடிகாமன்வாடி வடக்கு தெருவில் செந்தில்குமார் (42) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் செம்பட்டியில், டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் இவருக்கும், இடையே கடந்த சில ஆண்டுகளாக, கோவில் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவு செந்தில்குமார் வீட்டில் குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் திடீரென்று நுழைந்த, 10க்கும் மேற்பட்ட கும்பல், முன் விரோத காரணமாக, செந்தில்குமாரை கத்தியால் சரம் மாதிரியாக குத்தி உள்ளனர். இதில், உயிருக்கு பயந்து செந்தில்குமார் தெருக்கள் வழியாக, நள்ளிரவில் நடுத்தெருவிற்கு தப்பி ஓடி உள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து ஓடிய அந்த கும்பல், அவர் மீது சரமாரியாக கத்தியால் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்கல் நடத்து உள்ளனர். தகவல் அறிந்து செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை, 108 ஆம்புலன்ஸ்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செந்தில்குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், போடிகாமன்வாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமார் உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு, கவிதா (38) என்ற மனைவியும், நவனித் (12) சந்திப் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். செந்தில்குமாரை நல்ல இரவில் தெருக்களில் விரட்டிச் சென்று சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை, செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவத்தால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செந்தில்குமார் கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.