நத்தம் கோபால்பட்டி அருகே நண்பர்கள் நடத்திய பல்லால் கடித்து தேங்காய் உரிக்கும் போட்டியில் 35 வினாடிகளில் தேங்காயை உரித்து கூலித் தொழிலாளி ரூ.500 பரிசுத்தொகை பெற்றார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே விளக்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளி. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அருகிலுள்ள தேங்காய் குடோன்களுக்கு சென்று தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார்.
இதே போல் நேற்று வேம்பார்பட்டியில் உள்ள தனியார் தேங்காய் குடோனில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கம்பியை பயன்படுத்தி வேகமாக தேங்காய் உரிக்கும் அவரைக் கண்ட அவரது நண்பர்கள், கம்பியை பயன்படுத்தி வேகமாக தேங்காய் உரிக்கிறீர்கள், இதேபோல் ஒரு நிமிடத்திற்குள் பல்லால் கடித்தே தேங்காய் உரித்தால் ரூ.500 பரிசு என போட்டி வைத்தனர்.
இதை ஏற்ற ராஜேந்திரன் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுக்க சொல்லிவிட்டு ஒரு தேங்காயை கையில் எடுத்து பல்லால் கடித்து ஒவ்வொரு பகுதியாக உரித்து எடுத்து 35 வினாடிகளில் ஒரு தேங்காயை உரித்து முடித்தார். போட்டியில் வெற்றி பெற்றதால் அவரது நண்பர்கள் ரூ. 500 பரிசாக வழங்கினர்.
கம்பி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டே மிகவும் கடினமாக உரிக்க வேண்டிய தேங்காயை வாயில் கடித்து வேகமாக உரித்த ராஜேந்திரனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.