திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே 300 ஆண்டுகளாக தலையில் தேங்காய் உடைத்து வலையபட்டி குரும்பாரின மக்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை – வலையப்பட்டியில் குரும்பாரின மக்கள் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திலிருந்து, சுமார் 300 ஆண்டுகளாக கோவில் திருவிழாவில் தொடர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இடையகோட்டை அருகே உள்ள வலையபட்டியில் குரும்பாரின மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு பிரார்த்தினைகள் நடந்தவுடன் வருடா வருடம் மஹா சிவராத்திரிக்கு மறுநாளில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்செலுத்துவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு நடைபெற்ற நான்கு நாள் திருவிழாவில் 50க்கு மேற்பட்டோருக்கு கோவில் பூசாரி பூச்சப்பன் பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கரூர், பொள்ளாச்சி, மதுரை, கோவை, உடுமலை மற்றும் பல்வேறு மாநிலமான கர்நாடகா , ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.