கன்னிவாடி அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா? தற்கொலையா ?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடைப்பதாக கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக வனப் பகுதிக்குள் சென்ற கன்னிவாடி போலீசார் கன்னிமார் கோயில் அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசிவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணை சடலமாக இருந்தது கன்னிவாடி அருகே உள்ள தோனி மலையை சேர்ந்த ஆண்டியம்மாள் 60 என்பது தெரிய வந்தது.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஆண்டியம்மாள் காணாமல் போனதாக கன்னிவாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது காட்டுப் பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலமும் ஒன்றாக இருக்குமோ என்று கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.