Categories: தமிழகம்

சிக்கன் ரைஸால் வந்த பிரச்சனை.. ஹோட்டலை சூறையாடிய கும்பல் ; பதற்றத்தால் போலீசார் குவிப்பு ; வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பிரியாணி ஹோட்டலில், சிக்கன் ரைஸ் விலை பிரச்சினையில், ஹோட்டல் கேசியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் திண்டுக்கல் சாலையில் இம்தாதுல்லா என்பவர் ரஹ்மானியா என்ற பெயரில் பிரியாணி ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் கேசியர், புரோட்டா மாஸ்டர், இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இந்த பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு சென்று தந்தூரி சிக்கன் கேட்டுள்ளனர். ஆனால், ஹோட்டலில் தந்தூரி சிக்கன் இல்லை என கூறியதால் புரோட்டா மாஸ்டருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். அதனை உடனடியாக மாஸ்டர் தயார் செய்து கொடுத்துள்ளார்.

அதற்கு பணம் செலுத்தும் போது பில்லில் டோக்கன் நம்பர் 85 எனவும், சிக்கன் ரைஸ் விலை ரூ.90 எனவும் இருந்துள்ளது. அப்போது, அந்த கும்பல் சிக்கன் ரைஸ் ரூ.85 தானே, ஆனால் நீங்கள் எப்படி? ரூபாய் 90 கேட்கலாம் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஹோட்டல் கேசியர் 85 என்பது டோக்கன் நம்பர் எனவும், 90 என்பது சிக்கன் ரைஸ்சின் விலை எனவும் கூறியுள்ளார். இதில், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், பேசிக்கொண்டிருந்த போதே, ஹோட்டலில் கேசியரை ஒருவர் தாக்குகிறார். அப்போது, இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஹோட்டலில் தாக்குதல் நடத்திய 3 பேர் கொண்ட கும்பலுக்கு ஆதரவாக, மேலும் சிலர் சேர்ந்து கொண்டு, ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர். அந்த சமயத்தில், ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரியாணி ஹோட்டலை அடித்து நொறுக்கிய கும்பல் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹோட்டல் உரிமையாளரின் ஆதரவாளர்கள், வத்தலகுண்டு காவல் நிலையத்தை நள்ளிரவில், திடீர் முற்றுகையிட்டனர். பின்னர், ஹோட்டல் உரிமையாளரின் ஆதரவாளர்கள் பள்ளிவாசல் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சிக்கன் ரைஸ் வாங்க சென்றவர்கள் மீது, தாக்குதல் நடத்திய ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஒரு தரப்பினர் திண்டுக்கல் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரு தரப்பினரும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளரும், தாக்குதலில் ஈடுபட்டவர்களும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பதட்டமான சூழ்நிலையில், பள்ளிவாசல் உள்ளிட்ட இப்பகுதியில், நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கடந்த வாரம், வத்தலகுண்டு பெரியகுளம் சாலையில் உள்ள பிரியாணி ஹோட்டலில் கொத்து புரோட்டா கேட்டு, ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று திண்டுக்கல் சாலையில் உள்ள, பிரியாணி ஹோட்டலில், சிக்கன் ரைஸ் விலை விவகாரத்தில், ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால், வத்தலகுண்டு பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

.

https://player.vimeo.com/video/868265051?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

ஹோட்டல்கள் மீது தொடர்கதையாக தாக்குதல் நடத்தி வரும், சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், வத்தலகுண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

2 minutes ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

41 minutes ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

42 minutes ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

1 hour ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

2 hours ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

3 hours ago

This website uses cookies.