திண்டுக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் நடராஜ், இவரது மகன் ஆனந்த சுதன் (வயது 22). இவர் திண்டுக்கல் – திருச்சி புறவழி சாலை EB காலனி அருகே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக ஹோட்டல் துவங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு தேவையான பொருளை எடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ரங்கநாதபுரம் மலை அருகே சென்ற போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் ஆனந்த சுதனை வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த ஆனந்த சுதன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தேடிவந்த நிலையில், திண்டுக்கல் புறவழிச்சாலையில் பதுங்கி இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த முரளிராஜா (வயது 35), ஆனஸ்ட்ராஜ் (வயது 32), இன்னாசி ஸ்டீபன் ராஜ் (வயது 31), ராபின் ஸ்டீபன் (வயது 28), பழனிச்சாமி (வயது 29), வெங்கடேசன் (வயது 32) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.