திண்டுக்கல் : திண்டுக்கல் பெஸ்கி கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சார்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக, அதே ஊரைச் சார்ந்த ஓட்டுனர் மாணிக்கம் என்பவர் ஓட்டி வந்தார். அதில், இ. சித்தூரைச் சார்ந்த நாகேந்திரன் (26), விக்னேஷ் (18) ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது, மூவரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியே வந்த போது, என்ஜின் கோளாறு காரணமாக மளமள என தீப்பற்றி எரிந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக வாகனத்தை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை உடனடியாக அணைத்தனர்.
இதனால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெட்ரோல் பங்கில் நடந்த இந்த தீ விபத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.