திண்டுக்கல் : திண்டுக்கல் பெஸ்கி கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சார்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக, அதே ஊரைச் சார்ந்த ஓட்டுனர் மாணிக்கம் என்பவர் ஓட்டி வந்தார். அதில், இ. சித்தூரைச் சார்ந்த நாகேந்திரன் (26), விக்னேஷ் (18) ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது, மூவரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியே வந்த போது, என்ஜின் கோளாறு காரணமாக மளமள என தீப்பற்றி எரிந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக வாகனத்தை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை உடனடியாக அணைத்தனர்.
இதனால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெட்ரோல் பங்கில் நடந்த இந்த தீ விபத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.