திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடப்பருத்தியூர் கிராமத்தில் உடுமலைபேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவரின் சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆழமாக வெட்டும் போது பாறைகள் இருந்ததால் வெடி வைத்து எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தலின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கள்ளிமந்தயத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் மணி (30) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கீரனூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வெடிவைத்த தோட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை சைய து வருகின்றனர்.
கிணறு வெட்டுவதற்காக வெடி மருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.