விருவீடு அருகே, முறுக்கு கம்பெனியில் வேலை தருவதாக கூறி, விவசாயி மனைவியை கடத்திய முறுக்கு கம்பெனி அதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, விருவீடு போலீஸ் சரகம் தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (35). இவர் மனைவி சரஸ்வதி (34). இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளன.
சோழவந்தான் அருகே குருவித்துறையைச் சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் (31), கேரளாவில் முறுக்கு கம்பெனி நடத்தி வருகிறார். இவர், அடிக்கடி தெப்பத்துப்பட்டி கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி முதல் தங்கப்பாண்டி மனைவி சரஸ்வதியை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்கபாண்டி தனது உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினார்.
பின்னர், விருவீடு காவல் நிலையத்தில் தனது மனைவி சரஸ்வதியை, குருவித்துறையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், முறுக்கு கம்பெனியில் வேலை தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று விட்டதாக, புகார் செய்தார். இதுகுறித்து விருவீடு காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சரஸ்வதியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கப்பாண்டி தனது மகன் மகளுடன் இன்று விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தனது மனைவியை தேடி, கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனால், இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.