புதுச்சேரி : புதுச்சேரியில் மென்பொருள் நிறுவனத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் வெளியீட்டுபோலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் கனுவாபேட்டை சேர்ந்தவர் வினோத் (22). பட்டதாரியான இவர் நேற்று லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு நேர்காணலுக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டு வந்து போது, அவரது அப்பச்சி வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவர் இது குறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அந்நிறுவனத்தின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு டிப்டாப் ஆசாமிகள் ஹெல்மட் மற்றும் மாஸ்க் அனிந்து கொண்டு அங்கு வருவதும், அதில் ஒருவர் மட்டும் இறங்கி வினோத்தின் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு செல்வதும், மற்றொருவர் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகி இருந்து. தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த தன்வந்திரி நகர் போலீசார், பட்டபகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற டிப்-டாப் ஆசாமிகளை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.