இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குநர் ஷங்கர். பிரமாண்டம், அதிநவீன தொழில்நுட்பம், பலகோடி பட்ஜெட் என்றாலே கண் இமைக்கும் நேரத்தில் அனைவரது நினைவுக்கு வருபவர் இயக்குனர் சங்கர் தான். இன்றைய சமூகத்தில், இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து விடாதா? என்று கற்பனைக்கு எட்டாத கதைகளை தேர்வு செய்து, அதற்கு ஏற்ற கதாநாயகர்களை தன் படங்களில் நடக்க வைத்து வெற்றிப்படங்களை அள்ளிக் கொடுத்தவர். இதனாலேயே, இயக்குநர் சங்கர் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
ஆனால், இந்தியன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சனைகள், லைக்கா நிறுவனத்துடன் ஏற்பட்டள்ள மோதல் என அவர் சந்தித்து வரும் பிரச்சனைகள் ஏராளம்.
இந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஆர்ஆர்ஆர் படம் பற்றி அவர் ட்விட்டரில் வியந்து பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
அந்த படத்தில் பயன்படுத்தபட்ட தொழிநுட்பங்கள் தென்ந்திய சினிமாவை இந்திய சினிமா துறையில் முக்கிய இடத்தினை பிடித்தது. தொடர்ந்து ராஜமௌலிக்கு பிராமண்ட இயக்குனர் என்ற பெயர் வைத்தே அழைக்கத் தொடங்கினர் தமிழ் ரசிகர்கள். இந்த நிலையில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்ப்பை படத்தின் காட்சிகள் பூர்த்தி செய்து வருகின்றன. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சிகள் பற்றி தான் ரசிகர்கள் தற்போது பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
மேலும் இந்த படம் முதல் நாளில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்கள் எடுத்து புகழ்பெற்ற சங்கர் ஆர்ஆர்ஆர் படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டி இருக்கிறார்.
மேலும்’மகாராஜ’மௌலி என அவர் ராஜமௌலிக்கு பட்டம் கொடுத்து இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் என்னங்க பிரம்மாண்டம் உங்களுக்கு இல்லாம போகுமோ என்ற அச்சத்தில் இப்படி புது பட்டம் கொடுக்கிறீங்களா என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.