Categories: தமிழகம்

உங்க கிரிமினல்தனம் வெளிய வரப் போகுது.. அரசியல் பிரமுகரிடம் ரூ.100 கோடி வாங்கி ஏமாற்றியதை சொல்லட்டா? ஞானவேல் ராஜாவை சீண்டிய இயக்குநர்!

உங்க கிரிமினல்தனம் வெளிய வரப் போகுது.. அரசியல் பிரமுகரிடம் ரூ.100 கோடி வாங்கி ஏமாற்றியதை சொல்லட்டா? ஞானவேல் ராஜாவை சீண்டிய இயக்குநர்!

ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பலரும் இன்னும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கை வெளியீட்டு கொண்டு வருகிறார்கள். அமீர் பற்றி பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியீட்டு இருந்தாலும் கூட அவர் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் அறிக்கை வெளியீட்டு இருந்தார்கள்.

அப்படி இருந்தும் இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்காமல் இருந்து வருகிறார். இதனால் பலரும் இன்னும் இந்த விவகாரத்தை விடாமல் அறிக்கை வெளியீட்டு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரபல இயக்குனரான எஸ்.ஆர்.பிரபாகரன் காட்டத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியிருப்பதாவது ” கடந்த 17 ஆண்டுகளாக அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி – அமீர் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது நீங்கள் ( ஞானவேல்) திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை ஆனால். அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல- முன்னால் நிற்கிறது. அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் அவர்கள்-எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட பெரும் படைப்பாளி என்று எல்லாருக்கும் தெரியும்.

மௌனம் பேசியதே ராம் பருத்திவீரன் ஆகிய மூன்று படைப்புகளுமே போதும் அமீர் அவர்களை – இன்னொரு பாரதிராஜா-வாக ஏற்றுக்கொள்ள எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து அவருக்கு அதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி.

உண்மை என்று நீங்கள் ஏதேதோ பேசினீர்களே இப்போது நான் உண்மை பேச ஆரம்பிக்கட்டா? அரசியல் பின்புலம் கொண்ட ஒருவரிடம் இருந்து பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி வாங்கிக்கொண்டு அதன்பிறகு மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக ஒரு செய்தி இருக்கிறது அதனை பற்றி இப்போது பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா ?

உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஓரே தீர்வு நீங்கள் பேட்டியோ மன்னிப்பு கேட்டு எழுதும் கடிதமோ அல்ல, நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு, இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பணத்தை ஏமாற்றீனீர்களோ அதன் இன்றைய மதிப்பு என்னவோ அதை அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து. இந்த பிரச்சனையை-நீங்கள் முடித்து கொள்வதுதான்” என கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

39 minutes ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 hour ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…

1 hour ago

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…

2 hours ago

பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!

வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…

2 hours ago

This website uses cookies.