திருப்பூர் : ஸ்கேட்டிங் பயிற்சி க்கு சென்ற போது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அம்மன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீசித்து, பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் வைபவ் (வயது 5), 1 ம் வகுப்பு படித்து வந்தான். வைபவ் திருப்பூர் டி.டி.பி. மில் சாலையில் உள்ள நீச்சல்&ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் ஸ்கேட்டிங் பயின்று வந்தான்.
நேற்று மாலை ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கழிப்பறைக்கு சென்ற வைபவ் அதன்பிறகு காணவில்லை. இதையடுத்து அவனை மற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி நிறுவன பணியாளர்கள் தேடினர்.
அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் வைபவ் இறந்து கிடந்தான். இது குறித்து உடனடியாக 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வைபவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர்.
நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து , ஸ்கேட்டிங் நிறுவன உரிமையாளர் ஜோதிபாசுவை 15 வேலம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.