திருப்பூர் : ஸ்கேட்டிங் பயிற்சி க்கு சென்ற போது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அம்மன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீசித்து, பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் வைபவ் (வயது 5), 1 ம் வகுப்பு படித்து வந்தான். வைபவ் திருப்பூர் டி.டி.பி. மில் சாலையில் உள்ள நீச்சல்&ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் ஸ்கேட்டிங் பயின்று வந்தான்.
நேற்று மாலை ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கழிப்பறைக்கு சென்ற வைபவ் அதன்பிறகு காணவில்லை. இதையடுத்து அவனை மற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி நிறுவன பணியாளர்கள் தேடினர்.
அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் வைபவ் இறந்து கிடந்தான். இது குறித்து உடனடியாக 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வைபவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர்.
நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து , ஸ்கேட்டிங் நிறுவன உரிமையாளர் ஜோதிபாசுவை 15 வேலம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.