மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி…!!
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ.15ம் தேதி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் செந்தி பாலாஜியின் நீதிமன்ற காவல் 12வது முறையாக டிச.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜிக்கு தரப்புக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. அதாவது, ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த சூழலில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ.15ம் தேதி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சிகிச்சை முடிந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.