Categories: தமிழகம்

100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதா? மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய திருமா… முதல்வருக்கு கோரிக்கை!!

திருப்பூர் : சாமளாபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில் நீர்வளத்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ள நிலையில் அந்ததியின மக்களுக்கு குடியிருக்கும் இடத்தை நிலமாக வகை மாற்றம் செய்து உரிய பட்டா வழங்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் கருப்பராயன் கோவில் அருகில் அருந்ததியினர் காலனியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியாக உள்ளது என்றும் இந்த பகுதியில் உள்ள அருந்ததியின மக்கள் 21 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருந்ததியின அருந்ததிய மக்களை காலி செய்யக் கோரியதை கண்டித்து சாமலாபுரம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் 12-வது நாளாக வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பனிரெண்டு நாட்களாக போராடிவரும் அருந்ததியின மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

மேலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறையாக வசித்துவரும் மக்களுக்கு குடியிருப்பு பகுதியை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து உரிய பட்டா வழங்கவேண்டும் எனவும் இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜூனியர் சுந்தரி வந்தாச்சு… சீரியல் நடிகை கேப்ரில்லா போட்ட பதிவு!

சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…

12 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…

1 hour ago

பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை… ஓட ஓட விரட்டி கொன்ற மகன்? ஷாக் தகவல்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…

1 hour ago

பிரபல தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. பணத்தை பதுக்கி வைத்தாரா? பகீர் பின்னணி!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…

2 hours ago

என் வீட்டை இடிச்சி! அம்மாவை தெரு தெருவா அலையவிட்டு?- ஆர்யாவின் மறுபக்கத்தை போட்டுடைத்த சந்தானம்

நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…

2 hours ago

ஹீரோயின் மெட்டீரியல்… எப்படி தமிழ் சினிமா மிஸ் பண்ணுச்சு : நித்யஸ்ரீ Cute Video!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…

2 hours ago

This website uses cookies.